districts

img

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்குக்கூலி உயர்வு கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.26 – டாஸ்மாக் குடோன்களில் வேலை செய்யக்கூடிய சுமைப்பணித் தொழிலா ளர்களுக்கு இறக்குக் கூலி உயர்வு மற் றும் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி  சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங் கத்தினர் திருப்பூர், காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் குடோன்  வளாகத்தில் செவ்வாயன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை  நிர்வாகி பிரபாகரன் தலைமை வகித் தார். இதில் மதுபான உற்பத்தி ஆலை  நிர்வாகங்கள் இறக்குக்கூலி உயர்வு வழங்க வேண்டும், டாஸ்மாக் நிர்வாகம்  தலையிட்டு கூலி உயர்வு கிடைக்கச் செய்ய வேண்டும், சட்டப்படி இந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், ஏற்றுக் கூலி தமிழகம் முழுவதும் ஒரேமா திரி நிர்ணயிக்க வேண்டும் என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கச் செயலாளர் கே. உண்ணிகிருஷ்ணன் பங்கேற்று கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில் சுமைப்பணித் தொழிலாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்ட னர்.

காங்கேயம் காங்கேயம் பகவதிபாளையம் டாஸ் மாக் குடோன் முன்பாக சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  கிளை நிர்வாகி எஸ்.தங்கராஜ் தலை மையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட் டத்தை வாழ்த்திப் பேசினார். காங்கே யம் டாஸ்மாக் குடோனில் வேலை செய் யும் சுமைப்பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.