districts

img

போனஸ் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

தாராபுரம்,  அக். 20 - தாராபுரத்தில் பொதுத்தொழிலாளர் சங் கம் (சிஐடியு) சார்பில் அனைத்துவகை தொழி லாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு  இன் னும் போனஸ் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சிஐடியு நிர்வாகி சத்தீஸ்வரன்  தலைமையில் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாராபுரம் வட்டாத் தில் இயங்கி வரும் நெல் விதை உற்பத்தி நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஓட்டல், இரும்பு மற்றும் ஜவுளி நிறுவனங் கள், ரைஸ்மில், ஒர்க் ஷாப், பனியன் மற்றும்  பஞ்சாலை நிறுவனங்கள், பேக்கரி உள்ளிட்ட  அனைத்துவகை தொழிலாளர்களுக்கும் உடனடியாக போனஸ் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத் தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செய லாளர் பி.பொன்னுச்சாமி, சிபிஎம் தாலுகா  செயலாளர் என்.கனகராஜ், சிஐடியு நிர்வாகி  கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.