திருப்பூர், பிப். 21 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியா ளர்கள் இடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி காங் கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று காங்கேயம் கிளை பணிமனை முன்பாக சிஐடியு சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. புதிய நிரந்தர பணி நியமனங்கள் செய்ய கூடாது என போடப்பட்ட அரசாணை 322, 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும் என வலியுறுத்தி கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க காங்கேயம் கிளை தலைவர் விஸ்வநாதன் தலைமை ஏற்றார். மத்திய சங்க நிர் வாகி நடராஜ் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற் றினார். பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.