நாமக்கல்,பிப். 7- தொழிலாளர்களை கொத்த டிமை போல நடத்தும் வால்ராசம் பாளையம் ஏரோ டெக்ஸ் விசைத் தறி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் அடுத்துள்ள, வெப்படை வால்ராசம்பாளையம் பகுதியில், ஏரோடெக்ஸ் என்ற தனியார் விசைத்தறி கூடம் இயங்கி வருகி றது. இதில், 26 குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் கடந்த 14.9.2023 தேதியன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதில், விசைத்தறிக்கூடத்தின் உரிமையாளர்கள் தங்களுக்கு முறையான கூலி வழங்குவ தில்லை. கூலி கேட்டால் அடிப்பது, உதைப்பது, கொன்றுவிடுவேன் என மிரட்டுவது, தரக்குறைவாக திட்டுவது, பள்ளி செல்லும் குழந் தைகளை ஃபேக்ட்டரிக்கு அனுப்ப வேண்டுமென வற்புறுத்துவது உள் ளிட்டவற்றை செய்து வருகின்றனர். மேலும், அட்வான்ஸ் என்ற பெயரில் பணத்தை நிர்பந்தமாக கொடுத்து கொத்தடிமை போல நடத்தி வரு கின்றனர். எனவே உயிருக்கு பாது காப்பு அளிக்க வேண்டும்! கொத்த டிமையாக உள்ள தங்களை மீட்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த பிரச்சனை சம்பந்தமாக 15.9.2023 மற்றும் 16.9.2023 ஆகிய தேதிகளில், திருச்செங்கோடு வரு வாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற அமை திப் பேச்சுவார்த்தையில் பாதிக்கப் பட்ட தொழிலாளர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக பத்தா யிரம் மற்றும் ஒன்பதரை சதம் போனஸ் 2024 முதல் 10 சதம் கூலி உயர்வு வழங்குவது எனவும், சித் திக் என்ற மேலாளரை உடனடி யாக வேலையிலிருந்து நீக்குவது, தொழிற்சங்கம், விஏஓ, காவல் ஆய் வாளர் உள்ளிட்டோர் கண்காணிப் பது என பத்து அம்ச கோரிக்கை களை அமல்படுத்த நிர்வாகம் ஏற் றுக் கொண்டது. இந்நிலையில் பல மாதங்கள் ஆகியும்,முறையான ஒப்பந்தத்தை அமுல்படுத்தாமல் இருந்தனர்.
ஏற் றுக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் ஏரோ டெக்ஸ் முதலாளி லோகு (எ) லோக நாதனை சந்திக்க சென்றனர். அங்கு, லோகநாதன் தொழிற்சங்க நிர்வாகிகளை தரை குறைவாக திட் டியும், பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தொழிலாளர்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டுவதும், இதனை தட் டிக்கேட்க சென்ற தொழிற்சங்க தலைவர்களை அவமரியாதை செய் வதை கண்டித்தும், ஏரோடெக்ஸ் நிறுவனர் மீது சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். போடப் பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பேருந்து நிறுத்த பகுதி அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.அசோகன், விவசாய சங்க மாநிலச் செயலாளர் படைவீடு பெருமாள், பள்ளிபாளையம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியக் குழு செயலாளர் ஆர்.ரவி, வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்திர மதி மற்றும் விசைத்தறி தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் முத்துக்கு மார், கே.பாலுசாமி, அசன் ,அங்க முத்து, குமார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நிறை வாக விசைத்தறி சங்க கமிட்டி உறுப் பினர் வெங்கடாஜலம் நன்றி கூறி னார். விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.