districts

img

வேலையைப் பறிக்கும் அரசாணை 139-ஐ ரத்து செய்க சிஐடியு பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 21 -  சொற்ப ஊதியத்தில் தினக்கூலி வேலை  செய்வோரின் வேலையைப் பறிக்கும் அர சாணை 139-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருப் பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சிஐடியு ஊரக வளர்ச்சி  உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செவ்வாயன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலை வர் பி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட  துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆதரித்துப் பேசினார். கோரிக் கைகள் குறித்து சங்கத்தின்  மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் உரையாற்றினார். இம்மாவட்டத்தில், தனி யார்மயத்தை புகுத்தும் அரசா ணை 139-ஐ அரசு ரத்து செய்ய  வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளில் வேலை  செய்யும் தூய்மைப்பணியாளர், குடிநீர்,  டிபிசி ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி  வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக  வேலை செய்யும், மேற்கண்ட ஊழியர்களை  பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று என்று இந்த ஆர்ப்பாட்டத் தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப் பாட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும்  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது.