districts

img

சிஐடியு உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.30- தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். மேலும், நிலுவைத்தொகை, பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை எடுக்கக்கூ டாது. மாதம் 5 ஆம் தேதிக்குள் சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.கண்ணன் தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந. வேலுசாமி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கு.சிவராஜ். சிஐடியு மாவட்ட உதவிச் செயலா ளர் சு.சுரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் ஆகி யோர் உரையாற்றினர்.

;