சேலம், ஜூலை 25- நலவாரிய பதிவுகளை முறைப்படுத்த வேண்டும் என சிஐடியு அமைப்புசாரா தொழிலாளர்கள் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அமைப்புசாரா தொழி லாளர்களின் நலவாரியம் முறையாக இயங்க வேண் டும். அமைப்புசாரா தொழி லாளர்களின் நலவாரிய பதி வுகளை முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை ஏற் றார். சிஐடியு மாநில உதவித்தலைவர் டி. உதயகுமார், சுமைப்பணி தொழிலாளர் சம் மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, சாலை போக்குவரத்து மாநில உதவித்தலை வர் எஸ்.கே.தியாகராஜன் ஆகியோர் உரை யாற்றினர். இதில் சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் வீ.இளங்கோ, மாநிலக்குழு உறுப் பினர் விஜயலட்சுமி, மாவட்ட இணைப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் அமைப்புசாரா தொழி லாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தருமபுரி இதேபோல், தருமபுரி மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் துணைத்தலைவர் சி.முரளி தலைமை ஏற் றார். மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.கலாவதி, ஜி.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஹானஸ்ட்ராஜ், சி.அங்கம்மாள், வி.ஜெயராமன், தீ.லெனின் மகேந்திரன், சி.சண்முகம், எம்.சங்கர், எம்.கண்ணதாசன், டி.வெங்கட்ராமன், சி.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் நன்றி கூறினார்.