districts

விசைத்தறியாளர்களின் நீடிக்கும் போராட்டம்: சட்டப்படி ஒப்பந்தம் நிறைவேற்ற சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.27- கோவை, திருப்பூர் மாவட்டங் களின் விசைத்தறி உரிமையாளர் களில் ஒரு பகுதியினர் வேலைநி றுத்தத்தை கைவிட்ட நிலையிலும், மற்றொரு பகுதியினர் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து வரு கின்றனர். ஜவுளி வியாபாரிகள் சட்டப்படி எழுத்துப்பூர்வ ஒப்பந் தம் நிறைவேற்றுவதற்கு முன் வந்து இப்பிரச்சனைக்கு சுமூக முடிவு காண வேண்டும் என்று சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்கம் கூறியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங் களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜன.9 ஆம் தேதி முதல் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில், ஒரு பிரிவினர் மட்டும் குறிப்பாக, பல்ல டம், மங்கலம், 63 வேலம்பாளை யம் உள்ளிட்ட சங்கத்தினர் அமைச் சர் முன்னிலையில் பேச்சுவார் த்தை நடத்திய அடிப்படையில் எழுத்துப்பூர்வ சட்டப்படியான ஒப் பந்தம் இல்லாமலேயே வேலை  நிறுத்தத்தை விலக்கிக் கொண்ட னர். எனினும் சோமனூர், அவி நாசி, தெக்கலூர், புதுப்பாளை யம், பெருமாநல்லூர் உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் எழுத்துப்பூர்வ மாக சட்டப்படி ஒப்பந்தம் நிறை வேற்ற வலியுறுத்தி போராட்டத் தைத் தொடர்ந்து வருகின்றனர். ஏறத்தாழ 50 நாட்கள் நிறைவ டைந்த நிலையில் வேலை நிறுத் தத்துடன், காலவரையற்ற உண் ணாவிரதமும் மேற்கொள்ளப்பட் டது. இந்நிலையில் திங்களன்று (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

நியாயமான போராட்டம்

ஏற்கெனவே கடந்த 2014 ஆம்  ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றியும். அதை ஜவுளி வியாபாரிகள் நடைமுறைப்ப டுத்த மறுத்துவிட்டனர். இந்நிலை யில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு பற்றி பேசப்பட்டது. அதில் சோமனூர் ரகத்திற்கு 24 சதவிகி தம், பல்லடம் ரகத்திற்கு 20 சதவி கிதம் கூலி உயர்வு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. எனி னும் பழையபடி விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் ஒப்புக் கொண்ட கூலி உயர்வை வழங்க மறுத்து விட்டு, பழைய கூலியையே வழங் கினர். இந்த சூழ்நிலையில்தான் விசைத்தறி உரிமையாளர்கள் ஜன.9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இப் போராட்டம் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் நடைபெற்று வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நேரத்தில் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சுல்தான் பேட்டையில் இருதரப்பினரை பங் கேற்கச் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விசைத்தறியா ளர்கள் கோரிக்கைக்கு மாறாக, ஜவுளி வியாபாரிகள் சோமனூர் ரகத்துக்கு 19 சதவிகிதம், பல்ல டம் ரகத்திற்கு 15 சதவிகிதம் என ஏற்கெனவே ஒப்புக் கொண்ட கூலி யைக் குறைத்தும், அதையும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தமாக இல் லாமலும் வாய்மொழி உறுதியாக முன்வைத்தனர். எப்படியாவது வேலை நிறுத்தம் முடிந்து சுமூக நிலை வர வேண்டும் என்ற உந் துதலில் ஒரு தரப்பினர் இதை ஏற்றுக் கொண்டனர்.

எனினும் ஏற்கெனவே பேசி ஒப்புக் கொண்ட கூலியையே தர மறுக்கும் வியாபாரிகள், தற் போது அதையும் குறைத்திருப்பது சரியல்ல, எழுத்துப்பூர்வ ஒப் பந்தமாக நிறைவேற்றாத நிலை யில் அவர்கள் இதை அமல்படுத் துவார்கள் என்று நம்புவதற்கு எந்த  முகாந்திரமும் இல்லை. எனவே எழுத்துப்பூர்வமாக சட்டப்படி ஒப் பந்தம் நிறைவேற்றினால்தான் இது செல்லுபடியாகும் என்று  விசைத்தறியாளர்கள் கூறுகின்ற னர். போராட்டம் நடைபெறக்கூ டிய பகுதிகளில் விசைத்தறியாளர் களுடன், பெண்கள் உள்பட அவர் களது குடும்பத்தினரும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். விசைத்தறியாளர்கள் மேற் கொண்டிருக்கும் இந்த போராட் டம் முற்றிலும் நியாயமானதே என்று சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். ஜவுளி வியாபாரிகளிடம் கூலி உயர்வுக்காக போராடும் விசைத் தறியாளர்களுக்கு, விசைத்தறி தொழிலாளர்களும் ஆதரவு அளிக்கின்றனர். எனினும் ஜவுளி வியாபாரிகளுடன் விசைத்தறியா ளர்கள் நெசவுக் கூலி உயர்வு  உடன்பாடு கண்டாலும், தொழிலா ளர் கூலி உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் உடன் பாடு ஏற்படுத்த முன்வர வேண்டும்  என்று சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் பி.முத்துசாமி கூறி னார். 

கடந்த காலங்களில் நெசவுக் கூலி உயர்வு பெறக்கூடிய விசைத் தறியாளர் சங்கங்கள், தொழிற்சங் கங்களுடன் சம்பள உயர்வு ஒப் பந்தம் நிறைவேற்ற முன்வருவ தில்லை. தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தருகிறோம் என பேச் சுவார்த்தையில் ஒப்புக் கொண் டாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் நிறைவேற்றுவதில்லை. இது போல் தொழிலாளர் தரப்புக்கு காட்டப்படும் பாரபட்சமான அணு குமுறையையே, தற்போது ஜவுளி  வியாபாரிகள் விசைத்தறியாளர் களுக்கு காட்டுகின்றனர். இரண்டு  அணுகுமுறையுமே சரியல்ல. விசைத்தறி ஜவுளித் தொழிலின் நீண்ட கால நிலைத்த வளர்ச்சிக்கு விசைத்தறியாளர்களுக்கும் சட் டப்படி நெசவுக் கூலி ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும், தொழிலா ளர் தரப்புக்கும் சட்டப்படி சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம் மேளனப் பொதுச் செயலாளர் எம். சந்திரன் கூறினார்.