திருப்பூர், நவ. 8 – டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு இறக்குக் கூலியை உயர்த்திக் கொடுக்க அமைச்சர் ஒப்புக் கொண்டும், நிர் வாகத்தில் உள்ள அதிகாரிகள் அமல்படுத்த மறுப்பதைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். டாஸ்மாக் குடோன்களில் வேலை செய் யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு இறக்குக் கூலியை உயர்த்தி வழங்க வேண் டும். மதுபானம் உட்பட அனைத்து பொருட் களின் விலையும் உயரும்போது தொழி லாளர் கூலியை மட்டும் மூன்று ஆண்டுக ளுக்கு மேலாக உயர்த்த மறுப்பதை கண்டித் தும், அமைச்சர் கூலி உயர்வு வழங்க ஒப்பு தல் தெரிவித்தும் டாஸ்மாக் நிர்வாகம் அதை அமல்படுத்த மறுப்பதைக் கண்டித்தும், தமிழ் நாடு முழுவதும் டாஸ்மாக் குடோன்கள் முன் பாக புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை டாஸ் மாக் குடோன் வளாகத்தில் புதனன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் குடோன் கிளை நிர்வாகி பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற சுமைப்பணித் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற் றினர். பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காங்கேயம் ஆர்ப்பாட்டம் காங்கயம் டாஸ்மாக் குடோன் முன்பாக புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி சங்கக் கிளைத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற சுமைப்பணித் தொழிலாளர் கள் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கோரிக்கை முழக்கம் எழுப்பினர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கட சாமி கோரிக்கையை ஆதரித்து உரையாற்றி னார். இதில் திரளானோர் கலந்து கொண்ட னர்.