திருப்பூர், ஜூலை 5 – தமிழகத்தில் கந்துவட்டி கும்பலிடம் இருந்து சாலையோர வியாபாரிகள் விடுபடுவதற்கு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தை அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தி சாலையோர வியாபாரி களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பி.ஆர். நிலையத்தில் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் 8ஆவது மாநாடு செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் முருகேசன் தலைமை யில் நடைபெற்ற இம்மாநாட்டை சிஐ டியு மாவட்டத் துணைச் செயலாளர் பி. செல்லதுரை தொடக்கி வைத்தார். சங்கச் செயலாளர் பி.பாலன் அறிக் கையை முன்வைத்து பேசினார். மாநாட் டில் சாலையோர வியாபாரிகள் விவா தித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங் காமல் அப்புறப்படுத்தக் கூடாது, மாநில தொடர்பு அதிகாரிகளை உடனே நியமிக்க வேண்டும், நகரை அழகுப டுத்துவது என்ற பெயரில் விற்பனைக் குழு அடையாள அட்டை வழங்காமல் ஏற்கெனவே வியாபாரம் செய்யும் இடத்திலிருந்து கடைகளை அகற்றக் கூடாது, உள்ளாட்சிகளில் தனிச் சட்டம் இயற்றி மத்திய சட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவராக முருகேசன், மாவட்டச் செயலாளராக பி.பாலன், மாவட்டப் பொருளாளராக யு.நாசர் அலி மற்றும் துணைத் தலைவர்களாக அய்த்தம் மாள், மணி, திருச்செல்வம், துணைச் செயலாளர்களாக சுப்பிரமணி, ஜெய மோகன், ராமர் உட்பட 30 பேர் நிர் வாகக் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாநாட்டின் முடிவில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி. மூர்த்தி நிறைவுரை ஆற்றினார்.