அவிநாசி, அக்.8- கட்டுமான தொழிலாளர் களுக்கு தீபாவளி போனசை ஒரு மாதத்திற்கு முன்பே வழங்க வேண்டுமென சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி யில் தனியார் திருமண மண்டபத் தில் சிஐடியு கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் 13ஆவது மாநாடு சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை பொன்னுச் சாமி ஏற்றி வைத்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்து சாமி வரவேற்றார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.கணேஷ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சிஐடியு கட்டிட கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ராஜ் முகம்மது துவக்க உரையாற்றினார். இதையடுத்து மாவட்டச் செய லாளர் ஏ.ராஜன், மாவட்டப் பொரு ளாளர் பி.ரமேஷ் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநாட்டில் சிஐடியு அவிநாசி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி நிறைவுரையாற்றினார். இம்மாநாட்டில், தில்லி மற்றும் கர்நாடக மாநில அரசு வழங்குவது போல் கட்டுமான தொழிலாளர் களுக்கும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 60 வயது பூர்த்திய டைந்த கட்டுமான தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். ஓய்வூதியம் பெறும் தொழி லாளி மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு உதவித் தொகை வழங்க வேண்டும். புதுப்பித்தல், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்ற அனைத்து மனுக்களை யும் விண்ணப்பிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புகை அளிக்கும் வகையில் வழிவகை செய்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆன்லைன் பதிவு அனைத் திற்கும் தொழிற்சங்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்கு முன்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டுமான பணி களை தனியாருக்கு ஒப்பந்த தரும் முறையை ரத்து செய்து பொதுப் பணித்துறை மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவராக எம்.கணேசன், மாவட்டச் செயலாளராக டி.குமார், மாவட்டப் பொருளாளராக ஏ. ராஜன் உள்ளிட்ட 15 பேர் மாவட் டக்குழுவாக தேர்வு செய்யப்பட் டனர். கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.கனகராஜ் நன்றி கூறினார்.