சேலம், நவ.1- ஆத்தூரில் சிஐடியு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரிய கணினி மையம் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூரில் சிஐடியு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய பதிவு கணினி மைய அலுவலகம் திறப்பு விழா சிஐடியு சேலம் மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வெங்கடபதி செங்கொடியினை ஏற்றி வைத் தார். மாவட்ட தலைவர் டி.உதயகுமார் அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் அலுவலகத்தை திறந்து வைத்தார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.முருகேசன் நன்றி கூறினார்.