கோவை, ஜூன் 30- கோவையில் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் ஒருவர் உயிரி ழந்த நிலையில், இதற்கு பிபிசிஎல் நிர்வாகத்தின் அலட்சியம் தான் என சிஐடியு குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பூசாரி பாளையம் குடியிருப்பு பகுதியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பரிதா பமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து பிபிசிஎல் நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் தான் என குற்றஞ்சாட்டி எம்டிஆர்எஸ் ஊழியர் கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பீளமேடு பாரத் பெட்ரோலியம் கார்ப் ரேசன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் எம்டிஆர்எஸ் சுங்கு நிர்வாகி கள் விக்னேஷ், வருண், சிவக்குமார், தினேஷ், சிதம்பரம், சுபாஷ், கார்த் திக், ரகுநாத் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். இதுகுறித்து தலைவர்கள் பேசு கையில், வீட்டு சமையலுக்கு பயன் படுத்தும் எரிவாயு உருளையில் எரி வாயு நிரப்ப பயிற்சியற்ற தொழிலாளி களை பயன்படுத்தியதே இவ்விபத் துக்கு காரணம். இதுகுறித்து கடந்த திங்களன்று கோவை மாவட்ட ஆட்சி யரிடம் பயிற்சியற்ற தொழிலாளி களை கொண்டு எரிவாயு உருளை நிரப்பியுள்ளனர். இதுகுறித்து உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தி இருந் தோம். தற்போது நடைபெற்ற விபத்து கூட இதன்காரணமாகத்தான் இருக் கும் என கருதுகிறோம். ஆகவே இது குறித்து உடனடியாக விசாரிக்க வேண் டும். இனிவரும் காலங்களில் பெரும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவ டிக்கை எடுத்து, பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டுமென எம்டிஆர்எஸ் ஊழியர்கள் வலியு றுத்தி உள்ளனர்.