districts

img

பஞ்சாலைத் தொழிலார்களுக்கு ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்கிடுக

ஈரோடு, ஜூலை 13- பஞ்சாலைத் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக  ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என ஊதிய நிர்ணயக்குழு கருத்து கேட்பு கூட்டத்தில் என சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. பஞ்சாலைத் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர் ணயிப்பதற்கான கருத்து கேட்பு கூட் டம் ஈரோடு - சென்னிமலை சாலை யில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் நடை பெற்றது. தொழிலாளர் துறை கூடு தல் தொழிலாளர் ஆணையர் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் தொழிலாளர்கள், தொழிற் சங்கப் பிரதிநிதிகள், வேலையளிப் போர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட் டத்தில் நூற்பாலை, நெசவு உள் ளிட்ட கம்போசிட் ஆலைகள், ஆட்டோ லூம்ஸ் எனப்படும் நவீன  ஆலைகள் 300க்கும் மேற்பட்டவை கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து  வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை என சட்டமிருந் தாலும், 12 மணி நேர வேலை என் பது எழுதப்படாத சட்டமாக உள் ளது. வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு ஆலை வளா கத்திலேயே குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரு மணமாகாத பெண் தொழிலாளர் களை பல்வேறு மாவட்டங்களிலி ருந்து அழைத்து வந்து ஒப்பந்த  அடிப்படையில் வேலை வாங்கப்படு கின்றனர். திருமகள் திருமண திட் டம் இன்றும் நீடிக்கிறது. தமிழ்நாடு அரசு பஞ்சாலைக ளில் பணிபுரியும் பயிற்சியாளர்க ளுக்கு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலி ரூ.512 ஆகும். பழகுநர் இல்லை என்று அறிவித்துள்ள போதி லும் தொழிலாளர்களுக்கு பழகுந ருக்கு அறிவிக்கப்பட்ட கூலி வழங்கு வதில்லை. வருங்கால வைப்பு நிதி, ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம், இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த அனைவருக்கும் பணி நிரந் தரம், சம வேலைக்கு சம ஊதியம், கூடுதல் பணிக்கு மிகை நேர ஊதி யம், மகப்பேறு கால விடுப்பு, குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு, புலம்பெயர் தொழிலாளர் பாது காப்பு, வேலையாள் இழப்பீடு மற் றும் பணிக்கொடை உள்ளிட்ட எந்த சட்டமும் அமுலாகவில்லை. இந்நிலையில், குறைந்தபட்ச ஊதிய நிர்ணய குழு பஞ்சாலை  தொழிலாளர்களுக்கு தினசரி  ரூ.900ம், மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண் டும் என சிஐடியு பஞ்சாலை தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர். வெங்கடாசலம் கேட்டுக் கொண் டார். சிஐடியு ஈரோடு மாவட்ட தலை வர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் மற்றும் நாமக்கல் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகி பி.சண்முகம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து வெப்படை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊதிய நிர் ணயிப்புக் குழுவினர் கள ஆய்விற் குச் சென்றனர்.