districts

img

சினிமா தொழில்நுட்பத்தை நல்லவற்றுக்காகப் பயன்படுத்த வேண்டும்!

அண்மையில் பத்திரிகைப் பேட்டியொன்றில் பிரபல எடிட்டர் பி. லெனின் சொல்லி யிருப்பது கவனிக்கத்தக்கது. அவர் கூறியிருப்பதாவது: சினிமா பார்ப்பவர்களில் சாதுவாக இருப்பவர்கள்கூட ஏன் சண்டைக் காட்சிகளில் மட்டும் “அடி, அப்படித் தான் போட்டு அடி, அவனை விடாதே...” - என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்து கிறார்கள்? அழுகைக் காட்சிகளில் எத்தனை பேர் தாரை தாரையாகக் கண்ணீர் விடுகிறார்கள்? அவர்களின் ஊடே இந்த உணர்வுகள் எப்படி ஊடுருவுகின்றன? கதாநாயகன் அடிக்கும்போது டிஷ்யூம் டிஷ்யூம் என்று மிகையான ஒலி ஏன் எழுப்பப்படுகின்றது? நிஜத்தில் யாராவது யாரையாவது அடிக்கிற போது இப்படிச் சத்தம் கேட்கிறதா? மொத் என்றுதான் கேட்கும். அதுவும் கூட அத்தனை  சத்தமாகக் கேட்குமா என்பது சந்தேகம்தான். திரையில் மட்டும் ஏன்  இவை  மிகைப்படுத்தப்படுகின்றன? ஏனென்றால், அது மனித உணர்வுகளிடையே பயணிக் கிறது. அந்த வன்முறை யை  அவ்வாறு ஊடுருவ  வைக்கத்தான்,

ஒருவரை அந்த வன்முறைக்குள் ஏன்  இழுத்துச் செல்ல வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? சினிமாதானே என்று கடந்து செல்லமுடியாது அல்லவா? தான் திரையில் பார்த்த வன்முறை மனநிலையோடுதான் ரசிகன் வீட்டுக்குத் திரும்புவான். ஏதாவது ஒருவகையில் தன் அன் றாட வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பான். நிஜத்துக் கும் நிழலுக்குமான வித்தியாசத்தைக் கண்ட றியக்கூடிய தன்மையற்று தன்னையறியாமல் அந்த  ஹீரோயிசத்துக்கான வன்முறைக்குள் தன்னை முன்னிருத்தி சோதனை செய்வான். அதில் ஏற்படும் பாதிப்பு எதுவென்றாலும் அது அவனை மட்டுமே சேரும். அதன் பாதிப்பை வரையறுத்துக் கூறமுடியாது. இப்படித்தான் பழிக்குப்பழி கொலை நிகழ்வுகளில் நடக்கிறது.  அத்தகைய வெறுப்பினை, தாக்கத்தினை நாம் யாருக்காக உரு வாக்குகிறோம்? யாரை நோக்கி அந்தக் கோபத்தினைத் தூண்டுகிறோம்? மொத்தத்தில் ஒருவனின் வாழ்க்கையே இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதனால்தான் சொல்கிறேன், இந்த  நவீன காலத்தில் நமக்குக் கிடைத்திருக் கும் அற்புதமான திரைப்படத் தொழில் நுட்ப வளர்ச்சியை எந்தளவு நல்லவற்று க்காகப் பயன்படுத்த வேண்டும் என்ப தில் நாம் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம். வளரும் தலைமுறையினரைப் பண்படு த்தி, மெதுமெதுவாக ஓர் அழகான சமூகத்தை உருவாக்கும் பயணம் அது!” - என்று கூறியிருக்கிறார்.