திருப்பூர், டிச.25- கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகை யில் செவ்வாயன்று நள்ளிரவு திருப்பூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்து பிறப்பை கொண்டா டும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கேத்ரின் ஆல யம், குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம், சிஎஸ்ஐ ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், இரவு 11 மணிக்கு சிறப்பு ஆராதனையும், அதனை தொடர்ந்து 12 மணிக்கு துவங்கிய சிறப்பு திருப்பலி நள்ளிரவு 2.30 மணி வரை நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள் என ஒவ்வொரு தேவாலயங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.