districts

img

வழிபாட்டில் புகுந்து மிரட்டல்: கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

திருப்பூர், ஜன.3- திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துவர்கள் வழிபாடு நடத்தும்போது ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்ன ணியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் கிறிஸ்துவ அமைப் பினர் புகார் கூறியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பாஸ்டர் ஐ.சாமு வேல் தலைமையில் திங்களன்று கிறிஸ்துவ அமைப் பைச் சேர்ந்தோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கிறிஸ்துவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும்போது ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அமைப்புகள் அத்துமீறி நுழைந்து பெண்களையும், சிறுவர்களை யும் வீடியோ எடுத்து, நீங்கள் வெளிநாட்டு கைக்கூலி கள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், நாங் கள் இருக்கும் பகுதியில் நீங்கள் இருக்கவே கூடாது, நீங்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்றும், பெண்களை யும் தகாத முறையில் பேசி அவமானப்படுத்தியும், கொலை மிரட்டல் விடுத்தும், மதபோதகர்கள் மனம் நோகும் படியும் வார்த்தைகளைச் சொல்லி மிரட்டு கிறார்கள்.  இது குறித்து காவல் துறையில் சொன்னால் அவர் கள் அலைக்கழிப்பதுடன், சட்டத்தில் சொல்லப்படாத சான்றிதழைக் கேட்டும், தனி மனித உரிமை மீறல்கள் செய்தும் அநீதி இழைக்கின்றனர். இந்நிலை தொடர்ந் தால் அனைவரும் ஆதார் அட்டை, ஓட்டுரிமை, குடும்ப அட்டை ஆகியவற்றை ஆட்சியரிடம் ஒப்படைத்து விடு கிறோம் என்று கூறியுள்ளனர்.