districts

img

சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி உதகையில் எழுச்சிமிகு வரவேற்பு

உதகை, நவ.1-  சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதிக்கு உதகையில் எழுச்சிமிகு வர வேற்பு வழங்கப்பட்டது. சிஐடியு 15 ஆவது மாநில மாநாடு 4.5.6 கன்னியாகுமரியில் நடப்பதையொட்டி சின் னியம்பாளையம் நினைவு ஜோதி சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குமரி செல்கிறது. அதன் ஒரு  பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி யில் தோழர். கே.ராஜன் நினைவு ஜோதி, தோழர் முகமது சித்திக் நினைவு ஜோதி மற்றும் உதகை பகுதியில் தோழர்கள் தியாக ராஜன் நினைவு ஜோதி ஆகியவை புறப் பட்டது. எஸ்.பி.டி. செயலாளர் மூர்த்தியிடம்  கோவை மாவட்ட தலைவர் ராஜன் பெற்றுக் கொண்டார். தோழர் சுரேஷ் நினைவு ஜோடியை தோட்ட சங்கச் தாய்சோலை கிளை தலைவர் ஜெயந்தியிடமிருந்து சிஐ டியு  மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார்.  கோத்தகிரி பகுதியில் தோழர் எஸ்.சின்னதுரை, தோழர் டி.காந்தி நினைவு ஜோதிகளும் பெறப்பட்டன. உதகை பகுதி யில் சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கர் லிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் துவக்கி வைத்தார். இதில், மதர் சங்க மாவட்ட செய லாளர் ஆதிரா, அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் கணேஷ் ஆகியோர்  வாழ்த்தி உரையாற்றினர். முடி வில், தோட்ட சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். முன்னதாக தியாகி கள் ஜோதிக்கு எழுச்சிமிகு வரவேற்பை உதகை மக்கள் அளித்தனர்.