கோவை, மே 6- கோவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் தங்க ளது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கை நிவாரண நிதிக்கு கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹசான் பாஷா. இவருக்கு ஹனா பாத்திமா (9) மற்றும் ஹர்பான் பாஷா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஹனா பாத்திமா மற்றும் ஹர்பான் பாஷா ஆகிய இருவரும், தமிழக முதல் வர் அறிவித்த இலங்கை நிவாரண நிதிக்கு, தங்களது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை நேரில் சந்தித்து கொடுத்தனர். மேலும், உண்டியலில் உள்ள பணத்தை எண்ணிப்பார்க்கவில்லை என்றும், ஆண்டுதோறும் ரம்ஜான் தினத்தில் இதுபோன்று பலருக்கு நிதி உதவி செய்து வருவதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர்.