districts

குழந்தைகள் விற்பனை

ராசிபுரம்,ஏப்.28-ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக மேலும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராசிபுரம் பகுதியில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக முன்னாள் செவிலியர் அமுதா,  அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஈரோடு மாவட்டம், அமராவதி நகர், ஆர்.என்.புதூரைச் சேர்ந்த பர்வீன் (37), மாமரத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிஷா (எ) ஹசினா (26), சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள்சாமி (48) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவ காரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட லீலா, செல்வி என மேலும் 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

;