ஈரோடு, டிச.12- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் சிமுலேசன் ஸ்டடீஸ்க்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், சென்னை சிம் இன்போசிஸ்டம்ஸ் பிரை வேட் லிமிடெட் உதவியுடன், கெமிக்கல் சிமுலேசன் ஸ்ட டீஸ்க்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸை கொங்கு பொறி யியல் கல்லூரியின் வேதியியல் பொறியியல் துறையில் வியாழனன்று திறக்கப்பட்டது. அதிநவீன உருவகப் படுத்துதல் தொழில்நுட்பங்கள் மூலம் ரசாயன பொறி யியல் கல்வி மற்றும் தொழில்துறையில் புரட்சியை ஏற் படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வின், தொடக்க விழாவில் சென்னையைச் சேர்ந்த நீர் மற்றும் எரிசக்தி தொழில்நுட்பத் துறையின் ஆலோசனை நிபுணரும், சவுதி அரேபியாவின் நால்கோவின் முன்னாள் மண்டல வணிக மேம்பாட்டு மேலாளருமான வெங்கட் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிம் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான வி.ராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர்.வி.பாலுசாமி, வேதியியல் பொறியியல் துறைத் தலைவர் முனைவர்.வி.சங்கீதா ஆகியோரும் இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிம் இன்போசிஸ்டம்ஸ் மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி இடையே புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலைகளுக்கான உள்ளக ஆபரேட்டர் பயிற்சி, தேசிய அளவில் தொழிற்சாலைகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை ஊக்கு விக்கப்படும். இதன் மூலம், தொழில்துறை - கல்வி கூட் டாண்மைகளை மேம்படுத்தவும் இயலும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.