districts

img

சந்திரயான் 3 வெற்றி: மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாட்டம்

கோவை, ஆக.24- சந்திரயான் 3 செயற்கைகோள் நில வின் தென் துருவப்பகுதியில் வெற்றிகர மாக இறங்கிய நிலையில், மார்க்சிஸ்ட்  கட்சி சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்திய வின்வெளி ஆராய்சி நிறுவ னம் (இஸ்ரோ), நிலவுக்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந் நிலையில், நிலவின் தென் துருவப்பகுதி யில் விக்ரம் லேண்டர் மெதுவாக தரை யிங்கி வரலாற்று சாதனை படைத்தது. இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக வியாழனன்று கோவை 100 அடி சாலையில் கங்கா திரையரங்கம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் சந்திரயான் 3 வெற்றி கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  இந்த வெற்றிக்கு காரணமாக உழைத்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பட் டாசு வெடித்தும், சாலையில் சென்ற அனைத்து பொதுமக்களுக்கும் இனிப் புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ராதிகா, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் யு.கே.வெள்ளிங்கிரி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கே. எஸ்.கனகராஜ், ஆறுச்சாமி, என்.ஆர்.முருகேசன் மற்றும் மாவட்டக்குழு, இடைக்குழு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.