கோவை, மே 22- கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக் கோயிலில் மலைப்பாதை அமைக்க சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஞாயிறன்று இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு மேற் கொண்டார். இதுகுறித்து, இந்து சமய அற நிலையத்துறை சார்பில் வெளியிட் டுள்ள அறிக்கையில், மலைக் கோயில்களில் மலைப்பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள திருக் கோயில்கள் இயற்கையே இறைவ னாக உள்ள கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி அருள்மிகு வெள் ளியங்கிரி ஆண்டவர் திருக்கோ யில் உள்ளிட்ட ஐந்து மலைக்கோ யில்களுக்கு மலைப்பாதை அமைக் கப்படும் என சட்டமன்ற கூட்டத்தின் மானிய கோரிக்கையில் அறிவிக் கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, முதற்கட்டமாக கோவை மாவட்டம், பூண்டி வட்டம், வெள்ளியங்கிரி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண் டவர் திருக்கோயிலில் அதிக அள வில் மக்கள் தரிசனம் செய்து வரு கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள், பக்தர்கள் பல்வேறு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டுக்கு கால கட்டங்களில் தரிசனம் செய்து கூட் டம் அதிமாக வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப் பாதை அமைக்க வலியுறுத்தியுள் ளனர். இதனையேற்று மலைப் பாதை அமைப்பதற்கு விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மலைப்பாதை அமைக்கும் பணிக் கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. முன்னதாக, வெள்ளிங் கிரி மலையில் ஏறி அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் உள் ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உட னிருந்தனர்.