districts

img

பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா

நாமக்கல், அக்.27- நாமக்கல்லில், பொது  சுகாதார துறையின் நூற் றாண்டு விழாவையொட்டி விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.  மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா டிசம்பர்  மாதம் 5,6,7 தேதிகளில் சென்னையில்  நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி கலை யரங்கில், நூற்றாண்டு விழா புதனன்று  நடைபெற்றது. பொது சுகாதாரத்துறை யிலுள்ள அலுவலர்களுக்கு விளையாட்டுப்  போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பரிசு மற்றும் சான்றிதழ் களை வழங்கினார். மேலும், 30 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வரும் அலுவலர் களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது.  முன்னதாக, பொது சுகாதார துறையின் சார்பாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று  வரும் தொடர் ஜோதி ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வந்த டைந்தது. இதனை பிரபாகரன், சுகாதார பணிகள் இயக்குநர் பிரபாகரன் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.ஜே.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.