கோவை, ஜூன் 4- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு, “எங்கள் அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது” என்ற தலைப் பில் வாலிபர் சங்கத்தின் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு ஞாயிறன்று இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், வடசித்தூர் வாச கர் வட்ட தோழர்கள் இணைந்து “எங் கள் அரசியல் அனைத்து உயிர்களுக்கு மானது” என்ற தலைப்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காவிய பாரதி தலைமை வகித்தார். இந் நிகழ்வில் வாலிபர் சங்க நிர்வாகிகள் சர வணன், ஜெயவர்மா, சரவணன், நித் திஷ் உட்பட திராளனோர் கலந்து கொண் டனர். ஓவியப்போட்டி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு, செங்கோ இயற்கை பண்ணை மற்றும் செங்கோ இயற்கை வேளாண் குழு சார்பில், நாமக்கல் மாவட்டம், பாப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகளுக் கான ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட 5 முதல் 15 வயது வரை குழந்தைகள் பங் கேற்றனர். “சுற்றுச்சூழலில் குழந்தை களின் பங்கு” என்ற தலைப்பில் ஓவி யங்களை வரைந்து, வெற்றி பெற்ற வர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சைக்கிள் பேரணி இயற்கை வளங்களை பாதுகாத் திடவும், காடுகளை அழிக்காமல் பாது காத்திட வேண்டும் என்று சேலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு, ஞாயிறன்று விழிப்புணர்வு சைக் கிள் பேரணி நடைபெற்றது. சேலம், ஜங் ஷன் பகுதியில் தொடங்கிய இப்பேர ணியை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சிவகுமார், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சிங்கா ஆகி யோர் கொடியசைத்து துவக்கி வைத்த னர். இப்பேரணி சூரமங்கலம், 3 ரோடு, குரங்குச்சாவடி, இரும்பாலை சாலை வழியாக 10 கிலோ மீட்டர் கடந்து, ரயில்வே கோட்ட மேலாளர் அலுவல கத்தில் நிறைவுபெற்றது. இதில் ரயில்வே காவல் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், பங் கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.