சூலூர், ஜன.9- சூலூர் விமான படைத்தளத்தில் செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த விமானப்படை பிரிவின் 60 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்குபெற்ற தென் பிராந்திய விமானப்படை தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் சலபதி, வீரர்களை நேரில் கௌரவித்தார். கோவை மாவட்டம், சூலூர் இந்திய ராணுவத்தின் விமா னப்படை பிரிவின் விமானப்படைத்தளம் செயல்பட்டு வரு கிறது. இந்த விமானப்படைத்தளத்தில் செயல்பட்டு வரும் “33 squadron” என்ற படைப்பிரிவு தொடங்கப்பட்டு 60 ஆண்டு காலமாக செயலாற்றி வருகிறது. இந்த படைப்பிரிவு வீரர்கள் ஏ.எம் 32 என்ற விமானங்களில் மூலம் எண்ணற்ற சாகசங்களை செய்து வருகின்றனர். மேலும், பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்கும் பணிகளிலும் இந்த படைப்பிரிவு செயலாற்றி வருகிறது. இப்பிரிவின் 60 ஆவது ஆண்டு நிறைவை கொண் டாடும் விதமாக சூலூர் விமானப்படை தளத்தில் வைர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் தெற்கு விமான படை தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் சலபதி கலந்து கொண்டு, 33 ஆவது படைப்பிரிவில் இடம்பெற் றுள்ள வீரர்களை சந்தித்து கௌரவித்தார். முன்னதாக, தென்பிராந்திய விமானப்படை தலைமை அதிகாரிக்கு விமானப்படை வீரர்கள் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணி வகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். இதில், வீரர்கள் மற்றும் விமானப்படை ஊழியர்கள் தலைமை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.