districts

img

தோழர் சங்கரய்யாவின் 102 ஆவது பிறந்தநாள் முதியோர்களுக்கு உணவளித்து கொண்டாட்டம்

கோவை ஜூலை 20- விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா-வின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் பல்வேறு அமைப்பினர் இணைத்து முதியோர்களுக்கு உணவளித்து கொண்டாடினர். விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிச இயக்கத் தின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா-வின் 102 ஆவது பிறந்தநாள் கடந்த ஜூலை 15 தேதி ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், வர்க்க வெகு ஜன அமைப்புகளின் சார்பிலும் கொண்டாடப்பட்டது. இந்நி லையில், சங்கரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை  மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டா ளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, வியாழ னன்று ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு ஆடைகள், உணவு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோ கரன், பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிபிஎம் மாமன்ற உறுப் ்பினர் ஆர்.பூபதி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இந்த உதவிகளை வழங்க ஒருங்கிணைப்பு செய்த பேன்சி டி.பாலு, பண்ணாரி அம்மன் ட்ரான்ஸ்போர்ட் முருகேசன், ராஜா மருத்துவமனை மருத்துவர் வரதராஜ், மாதர் சங்க தலைவர் ஜெயம்மா, நடராஜ், கே.தர்மராஜ், அன்பு இல்லத்தின் பொறுப்பாளர் பிரின்ஸ் மற்றும் எல்ஐசி  ஜெயகண்ணன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது.