districts

img

மாவீரன் பகத்சிங் 115 ஆவது பிறந்த தினம் கொண்டாட்டம்

நாமக்கல், செப்.28- மாவீரன் பகத்சிங் 115 ஆவது பிறந்த தினத்தையொட்டி,  பள்ளி பாளையத்தில் வாலிபர் சங்கம் சார் பில் புதனன்று கொண்டாடப்பட்டது.  நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் பகத்சிங்  115 ஆவது பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. ஆவரங்காடு நகரம், காவிரி ஆர்.எஸ், அன்னை சத்யா நகர்  ஆகிய மூன்று கிளைகள் சார்பில் பகத் சிங் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, பள்ளிபாளையம் வாலிபர் சங்க ஒன் றிய செயலாளர் நவீன் தலைமை வகித்தார். வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் லட்சுமணன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.ரவி, துணைச் செயலாளர் ஜவகர் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

கோவை 

இதேபோன்று மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி போதைக் கெதிரான உறுதிமொழியேற்பு நிகழ்வு வாலிபர் சங்க கோவை மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற் றது. காட்டூரில் உள்ள இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற பகத்சிங் பிறந்த நாள் உறுதி யேற்பு நிகழ்வில் வாலிபர் சங்க  மாவட்ட தலைவர் எம்.விவேகா னந்தன், மாணவர் சங்க மாவட்ட செய லாளர் அசாருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பென்னாகரத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் நகர செயலாளர் குபேந்திரன் தலைமையில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சபரி ராஜன், பகுதி குழு செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ஆ. ஜீவானந்தம், ஜி.சிவன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் பி.எம்.முருகே சன், வெள்ளிங்கிரி உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.