திருப்பூர், ஆக. 21 - திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மது பான கடையை உடனடியாக மூடாவிட் டால் வரும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத் தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. திருப்பூர் மாநகர், கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அரு கில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை (கடை எண் :1909) உடனே அடைத்திட கோரி திங்களன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் உள்ள கலால் உதவி ஆணையரி டம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதி யில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்து இருப்பதால் இப்பகுதியில் உள்ள கடை கள் மற்றும் குடியிருப்பு பகுதி என்பது திறந்தவெளி மதுபான பார் ஆக உள் ளது. பெண்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் கடும் அவதிப்படுகின்றனர். மது குடிக்க வருவோர் வாகனங்களை தாறு மாறாக நிறுத்துவதாலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. மது போதையில் பலர் சச்சரவில் ஈடுபடு வதும், தகாத செயல்களில் ஈடுபடுவ தும் வாடிக்கையாக உள்ளது. எனவே இந்த கடையை அகற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். தமிழக அரசு அண் மையில் மாநிலம் முழுவதும் 500 மது பான கடைகளை மூடிய போது இந்தக் கடையும் மூடப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. எனினும் தற்போது வரை இந்த கடை தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஜூலை 24 அன்று மேற் கண்ட டாஸ்மாக் கடையை அடைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டிருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உடனே கடையை அடைக்க கோரி வரும் 27ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்பதையும் உதவி ஆணையரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண் டாவது மண்டல குழு செயலாளர் வி. எஸ்.சசிகுமார், மைக்.ராஜேந்திரன் மற் றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.