districts

img

காவிரி கரையோர குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: மக்கள் அவதி!

தருமபுரி, ஆக.1- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலை யில், ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந் ததால், அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கர்நாடகா, கேரளம் மாநிலத் தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் காவிரி நீர்பி டிப்பு பகுதிகளான குடகு, ஹாசன், மாண்டியா, தட்சண கன்னடா, வய நாடு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிதீவிரமாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தி லுள்ள கபிணி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் முழு கொள் ளளவை எட்டியுள்ளன. கர்நாடகா  அணைகளில் இருந்து வியாழன் அன்று மாலை நிலவரப்படி விநா டிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு, ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருகிறது. இந்த நீர் வரத்து காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட  அருவிகளை தண்ணீர் மூழ்கடித்த வாறு செல்கிறது. மேலும், அரு விக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீரானது திறந்து விடப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லில் மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது  நீர்வரத்து அதிகரிப்பால் சுற் றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவி மற்றும் ஆற்றுப்பகு தியில் குளிக்கவும், பரிசல் இயக்க வும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக் கப்பட்ட தடையானது தொடர்ந்து 16  ஆவது நாளாக நீடித்து வருகிறது. மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலை யில், கரையோர பகுதியில் உள்ள  குடியிருப்புகள், தனியார் விடுதி களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், ஒகேனக்கல்லிலிருந்து அஞ்செட்டி வழியாக ஓசூர் செல்லக் கூடிய பிரதான சாலையில் தண்ணீர்  சூழ்ந்துள்ளதை, கண்டு கொள்ளா மல் ஆபத்தையும் உணராமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்க ளும் தண்ணீர் சூழ்ந்த சாலையை கடந்து செல்கின்றனர். மேலும். 2  லட்சத்திற்கு மேல் தண்ணீர் வந்து  கொண்டிருப்பதால், கரையோரப்  பகுதியில் வாழும் குடியிருப்புக ளைச் சேர்ந்த மக்களை அப்புறப்ப டுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.