districts

சாதியப் பாகுபாட்டை எதிர்த்ததால் வழக்கு: ரத்து செய்தது நீதிமன்றம்

ஈரோடு, ஜன. 13- மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டிய தலைமை ஆசிரியரின் செயலை  அம்பலப்படுத்தி, இயக்கம் நடத்திய சிபிஎம்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மீது காவல் துறை பொய் வழக்கு புனையப்பட்ட நிலை யில், அதனை நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்திற் குட்பட்டது மலையம்பாளையம். இங்கு உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை  ஆசிரியராக ச,தனலட்சுமி பணியாற்றி வந் தார். இப்பள்ளியில் இரண்டு மாணவர்கள்  தரை தளத்தில் பெயிண்ட் அடிக்கும் காட்சி 8.3. 2022 அன்று சமூக வலைத்தளங்களில் பரவி யது.  இதனையறிந்து கல்வித்துறை அதிகாரி கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், இச்சம்பவம் உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று வட்டார கல்வி அதிகாரிகள்  கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் விசாரணையில் பட்டியலின மாண வர்களை மட்டும் பெயிண்ட் அடிக்க வைத்தது  உண்மை என்று தெரியவந்தது. அதனடிப்ப டையில் தலைமை ஆசிரியர் மீது துறை சார்ந்த  நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து, சாதிய பாகுபாட்டுடன் மாணவர்களை நடத்துவதையறிந்து மேலும்,  விபரங்களை அறிய, மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. முருகேசன், கொடுமுடி- மொடக்குறிச்சி செய லாளர் கே.பி.கனகவேல் ஆகியோர் அடங் கிய உண்மை அறியும் குழு விசாரணையில் ஈடுபட்டது.  இதில், பட்டியல் இன மாணவர்களைப் பெயிண்ட் அடிக்க வைத்தது மட்டுமின்றி, கழி வறைகளையும் சுத்தம் செய்யவும் பயன்ப டுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ் வாறு கழிவறை சுத்தம் செய்யும் மாணவர் களுக்கு தலா ரூ 10ஐ தலைமை ஆசிரியர் வழங்குவதும் தெரியவந்தது. இதனையடுத்து, உண்மை அறியும் குழு வின் விசாரணையின் அடிப்படையில் காவல்  நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இப்பிரச் சனையில் கல்வித்துறை அதிகாரிகள் போல்  காவல்துறை அதிகாரிகள் தானாக முன்வந் தும் விசாரிக்கவில்லை. புகார் செய்த பின்ன ரும் நடவடிக்கை எடுக்க வில்லை.  எனவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 17.3.2022 அன்று காவல்துறை வன் கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திட  வலியுறுததி நடுப்பாளையம் பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாதிய வன்கொடுமை குறித்து புகாரும் அளிக் கப்பட்டன. ஆனாலும், காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே, மாவட்ட  காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக் கப்பட்டது. அதன் பிறகும் காவல் துறை  வழக்கு பதிவு செய்ய வில்லை. குறைந்த பட்சம் CSR ரசீது கூட கொடுக்க வில்லை.  இதற்கிடையில் மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் வீடியோ எடுத்து வெளி யிட்ட வெள்ளோட்டம் பரப்பு வார்டு உறுப்பி னரை (எல்.சண்முகம்) காவல் நிலையத் திற்கு வரவழைத்து வார்டு கவுன்சிலரா நீ,  உனக்கு பள்ளிக்கூடத்தில் உனக்கு என்னடா  வேலை, சாத்தான் குளம் சம்பவம் உனக்கு  தெரியுமா? என்கவுண்டரில் போட்டு விடு வேன் என்று மிரட்டி எழுதி வாங்கியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு உறுப் பினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மேற்கு மண்டல ஐ. ஜி க்கு புகார் அனுப்பியுள்ளார்.  இந்நிலையில், குற்றமிழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்திய சிபிஎம், ததீஒமு,  மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 22 பேர்  மீது அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தி னர் என்று சாதிய வன்மத்தோடு வழக்கு பதிவு  செய்யதது காவல்துறை.  காவல் ஆய்வாளரின் ஒருதலைப்பட்ச மான நிலை மற்றும் சாதிய ஆதரவு நிலை  பாடு காரணமாக இந்த வழக்கு பதிவு செய் துள்ளதால் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றத்தில் தீண்டாமை  ஒழிப்பு முன்னணி வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கின் விசாரணையில், மலை யம்பாளையம் காவல்  காவல் ஆய்வாளரின்  ஒருதலைப்பட்சமாக ஆர்ப்பாட்டம் நடத்திய  22 தோழர்கள் மீது போடப்பட்டது தெரியவந் தது. எனவே எப்ஐஆரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யது. இதன் மூலம் காவல் ஆய்வாளரின் ஒரு தலைப்பட்சமான, சாதிய ஆதரவு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.