உதகை, மே 30- கோத்தகிரி பகுதியில் போக்கு வரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 48 பேர் மீது காவல் துறை யினர் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா வையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, உதகையி லிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல் கிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோத்த கிரி போக்குவரத்து ஆய்வாளர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் சாலையில் வாகன தணிக்கை மேற் கொண்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்க ளில் சென்றவர்கள், போக்குவரத்து விதி முறைகளை மீறியவர்கள், ஓட்டுநர் உரி மம், வாகனங்களின் உரிய ஆவணங் கள் இல்லாதவர்கள் என 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத் தனர்.