districts

img

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

உதகை, பிப்.13- உதகை கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரிசி மூட்டை ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக் குள்ளானதால் மூன்று மாநில போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் வியாழனன்று அதிகாலை கர் நாடகா மாநிலம் மைசூரில் இருந்து அரிசி ஏற்றிய சரக்கு லாரி  வந்து கொண்டிருந்தது. இந்த லாரி கூடலூர் அருகே தவள மலை மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளை வின் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நிலை  தடுமாறி மேல்புற சாலையில் இருந்து 100 அடி பள்ளத்தில்  கவிந்தது. கீழ்ப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து ஏற்பட்ட  விபத்தில், காயமடைந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நடுவட்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே விபத்து காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மூன்று மாநில போக்குவரத்தும் கடுமை யாக பாதிக்கப்பட்டது. மேலும், உதகை கூடலூர் செல் லும் மலைப் பாதையில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான சரக்கு லாரியிலிருந்த அரிசி மூட்டைகள் வெளியேற்றப்பட்டு ஜேசிபி  வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.