districts

img

கைப்பேசியை கையாளுவதில் கவனம் தேவை!

தருமபுரி, செப்.12- சமூக ஊடகங்களில் சாதி, மத அடிப்படையில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதால், கைப்பேசியை கையா ளுவதில் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி நிர்வா கம் மற்றும் தகடூர் புத்தகப் பேரவை சார்பில், மாணவர் களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி வியாழனன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ரா.சங்கர் வர வேற்றார். தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர் இரா.செந்தில் வாழ்த்தி பேசினார். கூடுதல் காவல்துறை இயக்குநர் செங்கதிர் பேசுகையில், வாசிப்பு வழக்கமே வாழ்க்கையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. பாடத்திட்டத்தையும் தாண்டி, பரந்த வாசிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வாசிப்பு வழக்கம் போட்டித் தேர்வுக்கு பெரிதும் துணை புரியும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் ஆழ்ந்த புலமை பெற வேண்டும். கைபேசியில் கவனச் சிதை வுக்கு ஆட்பட்டு விடக்கூடாது. இத்தகைய சமூக ஊடகங்கள் மூலம் மத, சாதி அடிப்படையில் தவறான செய்திகளைப் பரப் பும் காரியத்தில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கையா ளுவதில் கவனம் தேவை. கைபேசியை ஆக்கப்பூர்வ நோக்கங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு திறமை உள்ளது. அதைச் செவ்வனே பயன்படுத்த வேண்டும். கடின உழைப்பே போட்டித்தேர் வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை, என்றார். முடிவில், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.கௌரன் நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.