districts

img

தாராபுரம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி

தாராபுரம், பிப்.7- தாராபுரத்தில் டேங்கர் லாரி மீது  கார் மோதிய விபத்தில் ஒரே குடும் பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45), துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி யசோதா (38), மாமியார் சரோஜா (65), மகன் ஹரிகரன் (8), மகள் கௌசிகா (4) ஆகியோருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரி சனம் செய்ய காரில் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து, பழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு சேலம் செல்வதற்காக தாராபுரம் ஒட் டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நல்லினி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட் டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவித மாக முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.  இதில் ராஜா மற்றும் அவரது மாமி யார் சரோஜா ஆகியோர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் காவல்துறைக்கு தகவல்  தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல்துறையினர் உயிரிழந்த ராஜா மற்றும் சரோஜா  ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். படுகாயமடைந்த யசோதா, ஹரிகரன், கௌசிகா தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணி கண்டன் வழக்கு பதிவு செய்து  டேங்கர் லாரி ஓட்டுநர் கடலுார்  மாவட்டம், காட்டுமன்னார் கோவில்  கலியமுர்த்தி என்பவரது மகன் ஆறு முகத்திடம் (37), விசாரணை நடத்தி  வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.