districts

img

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

அவிநாசி, பிப்.24- அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகர மன்ற தேர்தலில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற வேட் பாளர்கள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள் ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22  ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. திருமுருகன் பூண்டி நகராட்சியை திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினரான திரா விட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை  சேர்ந்த வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பி னர்கள் தமிழ்நாடு செய்தித்துறை அமைச் சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக மாவட்டப் பொறுப்பா ளர் பத்மநாபன் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  இதில் திராவிட முன்னேற்றக் கழக திருமுருகன்பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்து சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  குழு உறுப்பினர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.