districts

img

மாநகராட்சி 17 வது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்புமனு

திருப்பூர்,பிப்.3- திருப்பூர் மாநகராட்சியில் 17 வது வார்டில் வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல்  பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருப் பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில்  உள்ளன. இதனைத் தொடர்ந்து திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி  சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 மாநகராட்சி வார் டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மார்க் ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17வது வார்டு க்கு ஈ.பி. ஜெயகி ருஷ்ணன் நஞ்சப்பா நகரில் உள்ள இரண்டாவது மண்டல  அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக கேத்தன் பாளையம் தியாகி பன்னீர்செல்வம் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் கூட்டணிக் கட்சி நிர்வாகி களை சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றார்.