districts

img

திருப்பூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.60 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம்

திருப்பூர், அக். 12 - தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே  திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில்  திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கப் படுகிறது. இது தொடர்பாக ரோட்டரி சங்கம் மற்றும்  தன்னார்வலர்களுடன் ஆலோசனைக் கூட் டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் முன்னிலை யில், மாநில அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தலைமையில் நடைபெற்றது. இதில் திருப் பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் நோய றிதல் மற்றும் சிகிச்சைக்கு மருத்துவமனை அமைக்கப்படுகிறது.  தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம்,  திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங் களிப்பு நிதி, பொதுமக்கள் மற்றும் ரோட்டரி  இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதி என  மொத்தம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படும்,

இம்மருத்துவமனையில் பெட்  ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பீட்டிலும்,  38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள்  ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலும்,2 அறுவை சிகிச்சை அரங்கம் ரூ.1.50 கோடி மதிப் பீட்டிலும், புற்றுநோயியல் அரங்கம் ரூ.1.50  கோடி மதிப்பீட்டிலும், கேத் ஆய்வகம் ரூ.1.50  கோடி மதிப்பீட்டிலும், ஆய்வக கருவிகள் ரூ.1  கோடி மதி;ப்பீட்டிலும், 9 மினி ஆய்வக அறை கள் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும், 16 மருத்துவ  அறைகள் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும், 1 லினி யர் ஆக்ஸிலரேட்டர் ரூ.10 கோடி மதிப்பீட்டி லும் அமைக்கப்பட உள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், செயலாளர் திருக் குமரன், துணைத்தலைவர் இளங்கோவன், ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி செந்தில் குமார் உள்ளிட்டோர் தலா ரூ.5 லட்சத்திற்கு காசோலை வழங்கினர். சாய ஆலை தலைவர்  காந்திராஜன் ரூ.50 லட்சம், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் அசோசியேசன் தலைவர் நாகேஷ் ரூ.25 லட்சம், சுலோச்சனா ஸ்பின் னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ண குமார் ரூ.25 லட்சம், ரோட்டரி சங்கத்தின் சார் பாக ரூ.5 கோடி, கைலாஷ் மார்பிள்ஸ் சார்பாக  ரூ.25 லட்சம் வழங்குவதற்கான ஒப்புதலும்  மற்றும் காசோலைகளையும் இம்மருத்துவ மனை அமைப்பதற்கு வழங்கினர்.  மாநகர காவல் ஆணையாளர் சா.பிரபா கரன், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.