districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தனியாருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தம் ரத்து

அவிநாசி, நவ.1- திருமுருகன்பூண்டி நகராட்சி யில் தனியாருக்கு கொடுக்கப் பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை, அனைத்து நகர்மன்ற உறுப்பினர் களின் ஆதரவோடு ரத்து செய்யப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருப்பூர் மாவட்டம், திருமுரு கன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குப்பை முதல்  சாக்கடை பிரச்சனை வரை தீர்க் கப்பட முடியாமல், மக்கள் மத்தி யில் பதில் கூற முடியாமல் நகர் மன்ற உறுப்பினர்கள் தவித்து வந்த னர். இதையடுத்து தூய்மைப் பணி தனியாருக்கு கொடுக்கப் பட்டதை ரத்து செய்ய வலியு றுத்தி, சில தினங்களுக்கு முன்பு  தலைவரிடம் நகர்மன்ற உறுப்பி னர்கள் மனு அளித்தனர். இந்நிலையில், திருமுருகன் பூண்டி நகர்மன்ற கூட்டம் தலைவர்  குமார் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் 38க்கும் மேற்பட்ட மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு, கவுன் சிலர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கப்பட்டதை ரத்து செய்யும்  தீர்மானம் அனைத்து கட்சிகளைச்  சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் சுப்ரமணியம் பேசுகையில், தூய்மைப் பணி யாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதற்கான ரசீது  வழங்க வேண்டும். திருமுருகநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள கழிப்பிடத்தை புதுப்பித்து தர வேண்டும். ராக்கியபாளையம் பேருந்து நிறுத்தம் முதல் உம்மை யஞ்செட்டிபாளையம் சாலை பகுதி  வரை சாக்கடை அமைப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் நிலம் கொடுத்தும், இது வரை அதற்கான பணிகள் நடை பெறவில்லை. உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்ற வேண் டும், என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட்  கட்சியின் 14 ஆவது வார்டு உறுப் பினர் தேவராஜன் பேசுகையில், பட்டியலின மக்களுக்கு வழங்கப் படும் ஈமத்தொகை கிடைப்ப தில்லை. விண்ணப்பமும் கொடுக் கப்பட்டுள்ளது. எனவே, அதனை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், உள்ளாட்சி மன்ற தீர்ப்பின் அடிப்படையில், புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், என வலியுறுத்தினார்.

ஊராட்சி துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை முயற்சி

அவிநாசி, நவ.1- கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத் தில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பச் சாம்பாளையம் கிராமம், துவாரகா அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் தர்மசீலன். இவர் வீட்டிற்கு அருகில் பழங்கரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜ் வீடு கட்டி வரு கிறார். மேலும், துணைத்தலைவர் வீட்டின் அருகில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைந்துள்ளது. இந்த மேல்நிலைத் தொட்டியில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனி டையே, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கட்டிக் கொண்டி ருக்கும் புதிய வீட்டிற்கு மேல்நிலைத் தொட்டியிலிருந்து பொது விநியோகத்திற்கு செல்லும் குழாயிலிருந்து தனியே  குழாய் மூலம் தனது புதிய கட்டடத்திற்கு தண்ணீரை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் கேள்வியெழுப்பியதற்கு ஆத்தி ரமடைந்த நடராஜ், தர்மசீலனை கொலை மிரட்டல் விடுத்து, வெளியூரிலிருந்து பிழைக்க வந்த நீ என்னை கேள்வி கேட் கிறாயா? என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தர்மசீலன் மற்றும் அவரது மனைவி இருவரும், புதனன்று தேவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத் திற்கு மனு அளிக்க வந்தனர். கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போதே தர்மசீலன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி தற்கொலைக்கு முயன்றார். உடனடி யாக அருகிலிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை  தடுத்து நிறுத்தினர். இதையடுத்து துணைத்தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் கூறிய தன் பேரில் அவர் அங்கிருந்து சென்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

தாராபுரம், நவ.1- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சித்ராவுத்தன்பாளையம், மெட்ரோ சிட்டியைச் சேர்ந்தவர் கருப்பணன் என்பவ ரது மகன் சுப்பிரமணி. இவர் கடந்த 05.01.2020 ஆம் தேதியன்று தாராபுரம் - ஒட்டன்சத்திரம் சாலையில், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே  வந்த தமிழ்நாடு அரசு பேருந்து சுப்பிரமணி மீது மோதியுள்ளது. இதில் அவர் காயமடைந் தார். இதைத்தொடர்ந்து இழப்பீடு கேட்டு தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தாரா புரம் சார்பு நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு, பாதிக் கப்பட்ட சுப்பிரமணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ1 லட்சத்து 88 ஆயி ரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க  வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால்,  குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த தொகையை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  சுப்பிரமணிக்கு வழங்கவில்லை. ஆகவே, சுப் பிரமணி சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசா ரித்த நீதிபதி தர்ம பிரபு, சம்பந்தப்பட்ட அரசு  பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி தாராபுரம் பேருந்து நிலையத் திற்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள், பழனியி லிருந்து ஈரோட்டிற்கு செல்வதற்காக தாரா புரம் பேருந்து நிலையத்திற்கு வந்த, அந்த  அரசு பேருந்தை ஜப்தி செய்து, தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நிறுத்தி வைத்தனர்.

நோய் பரப்பும் தொழிற்சாலை: மக்கள் அவதி

திருப்பூர், நவ.1– குடியிருப்புக்குள் தொற்றுநோய் பரப்பும்  தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலூகா, சர்கார் பெரியபாளையம் ஊராட்சி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இதன் மத்தியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான காம்ப் பேக்டிங் நிறுவனத்திலிருந்து சுத்திகரிக்கப் படாத கழிவுநீர், மழைநீர் வடிகால் வாய்கா லில் சட்டவிரோதமாக திறந்துவிட்டு வரு கிறது. அதிகளவில் வெளியேற்றப்படும் கழி வுநீர், கால்வாயில் செல்ல வழியின்றி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று  கொசுவை உற்பத்தி செய்து வருகிறது. இத னால் அப்பகுதி வாழ் மக்கள் இரவு, பகல் என எந்நேரமும் கொசுக்கடியில் சிக்கி அவதிக் குள்ளாகி வருகின்றனர். குடியிருப்பு பகுதி யில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் உற்பத்தி யாகும் கொசுவால் பல்வேறு நோய் பரவும்  அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளளர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு முறைகே டாக கழிவுநீரை வடிகால் வாய்க்காலில் வெளியேற்றும் தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரி சரவணக்குமாரிடம் கேட்டபோது, உரிய முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவ டிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

இடுவாய் ஊராட்சி நிர்வாகத்துக்குப் பாராட்டு

திருப்பூர், நவ.1– இடுவாய் கிராமத்தில் அமைந்திருந்த டாஸ் மாக் மதுபானக் கடையை தொடர் போராட் டத்தின் மூலம் இடமாற்றச் செய்த இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் உள் ளிட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் பாராட் டுத் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சி ஒன்றியப்பள்ளி வளாகத்தில் புதனன்று கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலை வர் கே.கணேசன் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மதுபானக் கடையை வெளியேற்றியதற்கு பாராட்டுத் தெரிவிக்கப் பட்டது. அத்துடன் நூறு நாள் வேலைத் திட் டத்தில் நான்கு மாதங்களாக சம்பளம் தரா மல் நிலுவையில் இருப்பதை உடனடியாக வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பனைமர விழிப்புணர்வு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரவலூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தேவகி சம் பத்குமார் தலைமை வகித்தார். இதில், அழிந்துவரும் பனைமரம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்க ளுக்கு பனைமர விதைகள் ஊராட்சி நிர்வா கம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன. விதைகளை தங்களது வீட்டின் அருகில் நட்டு  அழிந்து வரும் பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. குரல்குட்டை கிராமசபை உடுமலை ஒன்றியம், குரல்குட்டையில் புதனன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கி.கனகராஜ் உள்ளிடோர், நூறுநாள் வேலை தொழிலாளர்களுக்கு உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்கவும், பாழ டைந்த உப்புத்தண்ணீர் தொட்டியை உடனடி யாக இடித்து அகற்றவும் தீர்மானம் கொண்டு  வரப்பட்டன. அத்துடன் குரல்குட்டை அரசுப் பள்ளியில் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில்  உள்ள பாழடைந்த பழைய சமையற் கூடத்தை உடனடியாக அகற்றவும், மலை யாண்டிபட்டினம் நியாய விலைக்கடை கட்ட டம் இடிந்துவிழும் நிலையில் உள்ளதை உட னடியாக ஆய்வு செய்து ரேசன் கடையை புதுப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறை வேற்ற மனு அளிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்க வட்டக்கிளை அமைப்பு

திருப்பூர், நவ.1– திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) உடுமலைப்பேட்டை வட்ட அமைப்புக்குழு கூட்டம் செவ்வா யன்று உடுமலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.கௌதமன் தலைமை வகித்தார். இக்கூட்டத் தில் சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், கூட்டு றவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகேந்தி ரன், மாவட்டப் பொருளாளர் பி.சுரேஷ், மாவட்ட துணைச்செய லாளர் வி.கருப்புசாமி மற்றும் உடுமலைப்பேட்டை நியாய விலை கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அலட்சியப்போக்குடன் செயல்படும் மருத்துவர் அவிநாசி அரசு மருத்துவமனை முற்றுகை

அவிநாசி, நவ.1- சாலை விபத்தில் படுகாயமடைந்தருக்கு சிகிச்சை அளிக் காமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட மருத்துவரை கண் டித்து, அப்பகுதி பொதுமக்கள் அவிநாசி அரசு மருத்துவம னையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே உள்ள அ.குரும்பபா ளையம், கிணத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னு சாமி (58). ஆட்டோ ஓட்டுநரான இவர், செவ்வாயன்று இரவு  அ.குரும்பபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேவூரிலிருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சேவூர் பந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (20) என்பவர், சாலையை கடக்க முயன்ற பொன்னுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பொன் னுசாமியை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல றிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர், மறியலில்  ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அவிநாசி அரசு மருத்துவமனையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 9 மணியாகியும் மருத்துவ அலுவலர் வராததால், பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், விபத்துக்குள்ளான பொன்னுசாமி கோவை தனியார்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட் டார். பொன்னுசாமி மீது இருச்சக்கர வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாலிபர் ஜெயராஜை பொதுமக்கள் அவி நாசி பிடித்து சேவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் கல்லூரியில் தீ விபத்து

கோவை, நவ.1- கோவை அருகே தனி யார் தொழில்நுட்பக் கல்லூரி யில் தீ விபத்தால் லட்சக்க ணக்கான ரூபாய் மதிப்பி லான பொருட்கள் தீக்கிரை யாகின. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம் பட்டி பகுதியில் ஜான்சன் கல்லூரி உள்ளது. இக்கல் லூரி வளாகத்தில் உள்ள  ஆடிட்டோரியத்தில் புத னன்று பிற்பகல் 2 மணி அளவில் கரும்புகை வெளி யேறியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் கருமத்தம்பட்டி போலீ சாருக்கு தகவல் அளிக்கப் பட்டது. தகவலின் பேரில் சம் பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அன் னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 3க்கும் மேற்பட்ட வாக னங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.  இந்த தீ விபத்தில் லட்சக் கணக்கான ரூபாய் மதிப்பி லான பொருட்கள் தீக்கிரை யாகின. சம்பவ இடத்திற்கு  வந்த கருமத்தம்பட்டி போலீ சாரின் முதற்கட்ட விசாரணை யில், மின் கசிவு காரணமாக தீ  விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

கோபி, நவ.1- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36).  இவர் பெருந்துறை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு  ஊஞ்சப்பாளையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், நாமக்கல் மின்வாரிய அலுவல கத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் பூபதி (30) என்பவர் டிரான்ஸ்பார்மரை ஆன் செய்ததும், இதனால் மின்சாரம் தாக்கி சுரேஷ்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பூபதியை போலீசார் கைது செய்தனர்.

533 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து

சேலம், நவ.1- கடந்த 9 மாதத்தில் செல்போன் பேசிய படி வாகனம் இயக்கிய 533 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுட் ளது. சேலம் சரகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு சிக்னல் மீறுவது,  அதிகபாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை  விதிமீறில்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து  செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டு வது, போதையில் வாகனம் ஓட்டுவது உள் ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகி றது. அந்தந்த மாவட்ட போலீசார், விதிமீறல் களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து  வருகின்றனர். இதேபோல், சேலம், தருமபுரி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக் கும் வகையில் செல்போன் பேசியபடி வாக னம் ஓட்டியவர்களின் ஓட்டுநர் தற்காலிக மாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதுகு றித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறு கையில், வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சேலம், தருமபுரியில் கடந்த 9 மாதத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 533 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத் திய 303 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவ டிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றனர்.

நூல் விலையில் மாற்றம் இல்லை

திருப்பூர், நவ.1– நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலை கள் மாதத்தின் முதல் நாளான புதனன்று அறிவித்தன. இதில் நூல் விலையில் எந்த  மாற்றமும் இன்றி கடந்த மாத விலையை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிலோவுக்கு 10 ஆம் நம்பர்  கோம்டு நூல் ரூ.187க்கும், 16  ஆம் நம்பர் ரூ.197க்கும், 20  ஆம் நம்பர் ரூ.255க்கும், 24  ஆம் நம்பர் ரூ.267க்கும், 30 ஆம் நம்பர் ரூ.277க்கும், 34 ஆம் நம்பர் ரூ.290க்கும் விற்பனையாகிறது.