districts

img

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் பிரச்சாரம்

ஈரோடு, டிச.23- அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் பெருந்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண் டும். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் மண்டல தலைவர் பி.ஜெகநாதன் தலைமையில் பிரச்சா ரம் நடைபெற்றது. இப்பிரச்சார இயக்கம் கருமாண்டிசெல்லி பாளையம், கருங்கரடு, கொண்டையன்காட்டு வலசு, காஞ் சிக்கோயில், பள்ளபாளையம், எல்லீஸ்பேட்டை ஆகிய பகுதி களில் நடைபெற்றது. கிளை தலைவர் சுப்பிரமணி, செயலா ளர் கண்ணியப்பன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.