districts

img

விதிகளுக்கு புறம்பாக இயங்கும் கல்குவாரி

திருச்செங்கோடு, டிச.14- விதிகளுக்கு புறம்பாக செயல்படும் கல்குவாரி உரிமை யாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விவசாயி உண்ணா விரத்தில் ஈடுபட்டுள்ளார்.  திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட கோக்கலை கிராமத்தை அடுத்துள்ள எளையம்பாளையம் சேர்ந்தவர் விவசாயி ஏ.ராமசாமி (70). இவரது தோட்டத்தின் மிக அருகில்  சிவக்குமார் என்பவரின் எஸ்பிஎஸ் கல்குவாரி இயங்கி வரு கிறது. இந்த கல்குவாரியில் அரசு விதித்துள்ள சட்ட விதி களுக்கு மாறாக இயங்குவதாக கடந்த மூன்றாண்டுகளாக விவசாயி ராமசாமி, அனைத்து அரசு துறை அதிகாரி களுக்கு கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டு மென மனு அளித்து வருகிறார். இந்நிலையில், கல்குவாரி  உரிமையாளர் சிவக்குமார் மற்றும் அவரது மகன் தினேஷ்  உள்ளிட்டோர்  ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுவித்த தாக கூறப்படுகிறது . இந்நிலையில், கடந்த டிச.10 தேதியன்று மதியம் சுமார்  3 மணியளவில் ராமசாமி தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது  குவாரி உரிமையாளர்கள் எவ்வித முன்னறிவிப்பு இன்றி மிகவும் சக்தி வாய்ந்த  வெடிகளை பாறைகளில் வைத்து வெடிக்க செய்துள்ளனர்.  இதனால் ராமசாமியின் வீடு மற்றும் தோட்டத்திலும் சிறு  சிறு பாறைகள் விழுந்ததில் ராமசாமி நல்வாய்ப்பாக  உயிர்  தப்பினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும், முதல் தகவல் அறிக்கையும் தரப்பட வில்லை. இதனால், செவ்வாயன்று விவசாயி ராமசாமி, தன் தோட் டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இப் போராட்டத்திற்கு சமூக ஆர்வலரும், வழக்கறிஞர் கெ.செ. செந்தில்குமார்,  அ.பூசன், ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ். மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் உட்பட ஆதரவு தெரிவித்து   போராட்டத்தில் ஈடுபட்டனர்.