திருப்பூர், பிப்.1- தொழில் முனைவோரை உரு வாக்கும் கலைஞரின் ஒருங்கி ணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி (2021-2022) திட் டத்தின் கீழ் வேளாண் பட்டதாரி, தோட்டக்கலை பட்டதாரி இளை ஞர்கள் சிறு தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 13 வட் டாரங்களில் உள்ள 353 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் இவ் வருடம் முதல் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட் டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு 50 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இள நிலை வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனை வோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு வருக்கு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித் தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய் தல், நாற்றாங்கால் பண்ணை அமைத்தல், பசுமைக் குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விளை பொருள்கள் ஏற்றுமதி செய்தல், இதர வேளாண் தொழில்கள் தொடங்க நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இதில் பயனடைவதற்கு 21 முதல் 40 வயதுக்குள் வயது வரம்பு இருக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்க ளில் பணிகளில் இருக்கக் கூடாது. கணினி பயன்படுத்த தெரிந்தி ருக்க வேண்டும்.
தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள், உரிய விண்ணப்பத் துடன் விரிவானத் திட்ட அறிக்கை யுடன் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங் களை இணைத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்க ளுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்க ளையோ அல்லது தொலைபேசி யில் 9842265585 வேளாண்மை துணை இயக்குநரை தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள் ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மானிய விலையில் பண்ணை கருவிகள் அதேபோல் விவசாயிகளுக்கு “வேளாண்மை பண்ணைக் கருவி கள் திட்டத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கப் பட உள்ளது. நடப்பு ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் சிறுகுறு விவ சாயிகள் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வாங்கி பயன்பெறலாம். தினசரி வேளாண் பணிகளுக்கு பயன்படும் கடப் பாரை, இரும்பு சட்டி, களை கொத்து, மண் வெட்டி மற்றும் கதிர் அரிவாள் ஆகிய பண்ணைக் கருவிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கு 75 சதவிகித மானிய விலையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு 90 சதவிகித மானிய விலை யிலும் பண்ணைக் கருவிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு விவ சாய குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு வீதம் வழங்கப்படும். விவசாயி கள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.