திருப்பூர், டிச. 12 - அரசு கேபிள் இலவச செட்டாப் பாக்ஸ்க ளுக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதை கைவிட வலியுறுத்தி தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 24 ஆயிரத்து 619 கேபிள் ஆபரேட்டர்கள், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களாக பதிவு செய் திருந்தனர். இந்த சூழலில் மத்திய அரசு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் கேபிள் டிவியில் டிஜிட்டல் முறையில் செட்டாப் பாக்ஸ் வழியாக மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தது. கடந்த 2017-இல் தமிழக அரசின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செட் டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் துவக்கி வைக் கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந் தபோது, அரசு கேபிள் டிவி விலை இல்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கியது. இந்நி லையில் தற்போது உள்ளூர் கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் தலையில் இடி விழுந்ததைப் போல் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் செயல்பாடு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அன லாக் முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறை துவக்கப்பட்ட பிறகு தற்போது அனலாக் முறை ஒளிபரப்புக்கு நிலுவை தொகை உள் ளதாக கூறி காவல்துறை, வருவாய்த் துறை மூலமாக, ஆபரே
அரசு கேபிள் டிவியில் பதிவு செய்த பல்லா யிரம் ஆப்ரேட்டர்களுக்கு ஒளிபரப்பு வழங்கா மலேயே நிலுவைத் தொகை உள்ளதாக தற் போது நோட்டீஸ் வழங்கப்பட்டு பல ஆண்டு கள் கழித்து, அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஆபரேட்டர்களை துன்புறுத்துவது முறை யற்ற செயல். இந்நிலையில் ஆப்ரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ் வாங்கும்போது வைப்பு தொகையாக பாக்ஸுக்கு 300 வீதம் செலுத்தியுள்ள நிலையில் கடந்த செப்டம் பர் 2017 ல் வழங்கப்பட்ட செட் டாப் பாக்ஸ்கள் தொலைக்காட்சிகளிலும் (டிவி), தின நாளி தழிலும் தமிழக முதல்வரால் வாடிக்கையா ளர்களுக்கு இலவசம் என்று அறிவித்து விட்டு தற்போது செயலாக்கம் இல்லாத பாக்ஸ்க ளுக்கு ரூபாய் 1800 வீதம் ஆபரேட்டர்களிடம் வசூலிப்பது நியாயமற்ற செயல். மேலும் இது வாடிக்கையாளர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும். எனவே அரசு செட்டாப் பாக்ஸ் கட்டணம் வசூலிப்பதை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொது நல சங்கத் தின் திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட் டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஒன்று திரண்ட ஆப்ரேட்டர்கள் தங் கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். அப்போது அன்லாக் நிலு வைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள் ளுபடி செய்வதோடு, வாடிக்கையாளர்க ளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதையும் உடனே நிறுத்த வேண்டும். மேலும் கேபிள் டிவி ஆப் ரேட்டர்களுக்கான நல வாரியத்தை உட னடியாக செயல்படுத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.