தாராபுரம், மார்ச் 19- தாராபுரம் அருகே அரசு மேல் நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாண வர் நிதியில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 6 வகுப்பறை களை தமிழ்நாடு செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத் தார். தாராபுரத்தை அடுத்துள்ள பொன்னிவாடி கிராமம், எல்லப் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறு முகம் மகன் சந்திரசேகர் (50). இவர் பொன்னிவாடி அருகேயுள்ள எலுகாம் வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1987 ஆம் ஆண்டு வரை படித் தார். தற்போது திருப்பூரில் அனிதா டெஸ்காட் என்ற நிறுவனத்தையும், தாராபுரத்தில் பல தொழில்களையும் செய்து வருகிறார். தான் படித்த பள்ளி யின் கட்டடங்கள் பழுதடைந்து உள்ள தையும், வகுப்பறை பற்றாக்குறை உள்ளதை அறிந்தார். இந்நிலையில், தனது தந்தை ஆறுமுகம் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் மற்றும் பழைய கட்டடத்தை சீரமைத்தும், சுற்றுச்சுவர் கட்டும் பணியினை மேற்கொண்டு முடிவடைந்து விட்டது.
இந்த வகுப்பறைகள் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் தாராபுரம் கோட் டாச்சியர் குமரேசன் தலைமையில் நடை பெற்றது. பள்ளி ஆசிரியை முத்தமிழ் வேணி வரவேற்றார். புதிய வகுப்ப றைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு உப கரணங்கள் மற்றும் ஜியோகிமெட்ரி பாக்ஸ்களை வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் மாணவர் சந்திரசேகர் பேசுகையில், இக்கல்வி யாண்டு முதல் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர் களின் உயர் கல்வி செலவு, தங்கும் விடுதி செலவு ஆகியவற்றை ஆறு முகம் அறக்கட்டளை ஏற்றுக் கொள்வ தாக அறிவித்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மேயர் தினேஷ்குமார், திரைக்கலைஞர் சின்னி ஜெயந்த், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், திருப்பூர் மாநகராட்சி 4ஆவது மண்டல தலைவர் பத்மநாபன்,பொன்னிவாடி பஞ்சாயத்து தலைவர் பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். முடிவில் எச்.எம்.கண்ணன் நன்றி கூறினார்.