districts

img

விளை நிலங்களில் முளைக்கும் கட்டடங்கள் கேள்விக்குள்ளாகும் கிராமப்புற சுகாதாரம்

உடுமலை, நவ.1- மடத்துக்குளம் தாலுகாவிற்குட் பட்ட கிராமப்புற பகுதிகளில், விளைநிலங்களில் புதிதாக உரு வாக்கப்பட்ட வீட்டுமனைகளால், மழைநீர் வெளியே செல்ல முடியா மல் தேங்கிக்கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.  உடுமலை மற்றும் மடத்துக்கு ளம் தாலூகா பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில், புதிதாக வீட்டுமனை கள் எவ்வித திட்டமிடலும் இல்லா மல் உருவாக்கபட்டுள்ளது. விளை நிலங்களை அழித்து புதிதுபுதி தாக கட்டடங்கள் முளைத்து வருகி றது. ஏற்கனவே விளைநிலங்களில் இருந்த நீர்வழித்தடங்களை ஆக்கி ரப்பு செய்தும், முற்றிலும் அழி தால் மழைநீர் எங்கும் செல்ல முடி யாமல் வீட்டுமனைகளில் தேங்குகி றது. இந்நிலையில், கடந்த மாதம் முதல் பருவமழை அதிகமான அள வில் பெய்து உள்ளது. இதனால்,  மழை நீர் வெளியேற வழியில்லா மல், தேங்கிய நீர் கழிவு நீராக மாறி யுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட் டுள்ளது. குடிநீர் தொட்டி பராமரிப்பில் மெத்தனம் இதேபோன்று, திருமூர்த்தி அணையில் இருந்து  கூட்டிக்குடிநீர்  திட்டத்தின் கீழ் பல்வேறு நீரேற் றும் தொட்டிகள் மூலம் குடிநீர் விநி யோகம் செய்யபட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டிகள் அனைத் தும்  திருமூர்த்தி அணைக்கு அரு கில் அமைக்கபட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரிப்பு செய் யப்பட்டு வந்தது. தற்போது, இத் திட்டங்களின் சுத்தகரிப்பு நிலை யங்கள் அனைத்தும் தனியார்  பராமரிப்பின் கீழ் விடப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனங்கள் குடிநீர் தொட்டிகளை பராமரிக்க  போதிய ஆட்கள் நியமிக்க வில்லை. இதனால் சுத்தகரிப்பு நிலையங்களையும், மிகப்பெரிய அளவிலான உயர்மட்ட தொட்டிக ளும் முறையாக  பராமரிக்கப்படா மல் உள்ளது. இதன்காரணமாக உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதியில் உள்ள கிரா மங்களுக்கு முறையாக  தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. கிரா மப்புறங்களில் உள்ள தொட்டிக் களையும் குறிப்பிட்ட கால இடை வெளியில் சுத்தம் செய்யப்பட்டு, சரி யான அளவு குளோரின் கலந்து  குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறதா என்பதையும், சம்பந்தப்பட்ட  அரசு அலுவலகள் ஆய்வு செய்வ தில்லை. இதனால், கிராமப்புற சுகா தாரம் தற்போது கேள்விக்குள்ளாகி உள்ளது. சமீப நாட்களாக, வயிற்றுப் போக்கினால் உடுமலை அரசு மற் றும் தனியார் மருத்துவமனைக்கு  வரும் நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. குடி நீரில் உள்ள குறைபாடுகளே கார ணம் என்கின்றனர் மருத்துவர்கள்.  பொது மக்களுக்கு பாதிப்பு ஏற் படுத்தும் வகையில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாத தனியார் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை மீண்டும் அரசே  ஏற்று நடத்தி மக்களின் சுகாதா ரத்தை பாதுகாக்க வேண்டும்  என அப்பகுதி சமூக செயற்பாட்டா ளர்கள் வலியுறுத்துகின்றனர்.