districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் திருப்பூரில் தர்ணா

திருப்பூர், ஜூலை 20 -  கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல்  வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி அகில இந்திய  பிஎஸ்என்எல் - தொலைத் தொடர்புத் துறை  ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக திருப்பூரில் புதன்கிழமை தர்ணா போராட்டம் நடத்தப் பட்டது. திருப்பூர் பிரதான தொலைபேசி நிலை யம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த  போராட்டத்தில் ரத்தினம் தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர் கே. விஸ்வநாதன் வர வேற்றார். முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வையும், நிலுவையில் உள்ள மருத்து வப்படி, மருத்துவ பில்களையும் உடனே வழங்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமலாக்க வலி யுறுத்தியும் இந்த தர்ணா போராட்டம் நடத் தப்பட்டது. மாநிலச் சங்க சார்பில் டி.கே.பிர சன்னன் தர்ணாவைத் துவக்கி வைத்துப் பேசி னார். என்.சுப்பிரமணியம் (போக்குவரத்து சங்கம்), ராஜேந்திரன் (தபால் ஆர்.எம்.எஸ்  சங்கம்), கே.உண்ணிகிருஷ்ணன் (சிஐடியு),  சௌந்தரபாண்டியன் (மாவட்டத்தலைவர்), குமரவேல் (பிஎஸ்என்எல்இயு), எஸ்.சுப்பிர மணியன் (முன்னாள் மாநில துணைச் செய லர்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி யும், போராட்டத்தின் அவசியம் குறித்தும் பேசினர். நிறைவாக கே.வாலீசன் நன்றி கூறி னார். இந்த போராட்டத்தில் சுமார் நூறு பேர்  கலந்து கொண்டனர்.