districts

img

கிராமப்புறங்களில் வைஃபை வசதி கோவை எம்.பி.,யுடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆலோசனை

கோவை, மார்ச் 7- கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப் புறங்களில் வைஃபை வசதி மற்றும் இணையதள சேவை களை மேம்படுத்துவது குறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யுடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் திங்களன்று ஆலோசனை மேற்கொண்டனர். ஒன்றிய அரசின் தொலை தொடர்பு துறையின் கோவை மண்டல இயக்குநர் விஜய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை பொது இயக்குநர் (ஊரகம்) சத்தியா பிரிய தர்ஷினி தலைமையிலான குழுவினர் திங்க ளன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து பேசினர். இதில், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத் துவது குறித்தும், துறை சார்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் கிராமப்புறங்களில் வைஃபை மூலம் இணைய வசதிகளை ஏற்படுத்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், தொலைத்தொடர்பு வசதிகளை  மேம்படுத்துவது குறித்த சந்தேகங்களுக் கும் விளக்கம் அளித்தனர்.