திருப்பூர், ஜூன் 5- ஒடிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் திங்களன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத் தில் நடைபெற்றது. பிபி புதூர் கிளைச் செயலாளர் சங்கிலி துரை தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஜாபர் அஞ்சலி மற்றும் ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர். இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை, எஐபிடிபிஎ கிளை, டிஎன்டிசிடபல்யூ, தமுஎகச கிளை நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.