திருப்பூர், ஏப்.16- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவையை உடனே வழங்கக் கோரி திருப்பூர் மெயின் தொலை பேசி நிலையத் தின் முன்பாக செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய தொலைத் தொடர்பு பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகி யவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இக்கூட் டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலர்கள் அருண்குமார், சங்கிலிதுரை வரவேற்றனர். ஓய்வூதியர் சங்க கிளைச் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் முகமது ஜாபர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் என். குமரவேல் நன்றி கூறினார். கோவை இதேபோன்று, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலு வலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவிச் செயலாளர் சாகின் அகமது தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், மாவட் டச் செயலாளர் மகேஸ்வரன், வட்ட உதவித் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.