districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா

தருமபுரி, ஜூலை 20-  ஓய்வூதிய உயர்வை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் அகில இந்திய  ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம், கோவை உள் ளிட்ட இடங்களில் தர்ணா போராட் டம் நடைபெற்றது. 1-1- 2017 முதல் வழங்கவேண் டிய 15 விழுக்காடு ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும். 2019  விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்க ளுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். மருத்துவப்படி, மருத்துவ பில் களை உடனே வழங்க வேண்டும். முடக்கப்பட்ட ஐடிஏ-வை உடனே வழங்க வேண்டும். சிஜிஎச்எஸ்-ஐ முறைப்படுத்த வேண்டும். நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரைகளை  அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தர்ணா போராட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.  தருமபுரியில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர்‌ ஆர். கோபாலன்‌ தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.பாஸ்கர் வரவேற் புரையாற்றினார். சிறப்பு அழைப்பா ளர் எம்.நாராயணசாமி போராட் டத்தை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் ஜி.உமாராணி, மாவட்ட செயலாளர் பி.கிருஷ் ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  கோட்ட இணைச்செயலாளர் ஏ. மாதேஸ்வரன்,  அனைத்து ஓய்வூதி யர் சங்க மாவட்ட செயலாளர் எம். பெருமாள் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். முடிவில் மாவட்ட பொருளாளர் எம்.குப்புசாமி நன்றி  கூறினார்.

சேலம்

சேலம் சீரங்கம் பாளையத்தில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலா ளர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற தர்ணா போராட்டத் திற்கு சங்கத்தின் நிர்வாகி எம்.மதிய ழகன் தலைமையேற்றார். கோரிக் கைகளை விளக்கி சங்கத்தின்  மாநிலத் தலைவர் டி.பழனி பேசி னார். இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இ. கோபால், மாநில உதவி செயலா ளர் எஸ்.ஹரிஹரன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ் மணி, பொறியாளர் பிரிவு மாவட்ட  செயலாளர்கள் மணிக்குமார், சண் முகசுந்தரம், ஓய்வூதியர் சங்க நிர் வாகி என்.சண்முகம் ஆகியோர் பேசினர். தர்ணா போராட்டத்தை அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில உதவி தலைவர் கே. ஆர்.கணேசன் முடித்து வைத்தார். இந்த  தர்ணா போராட்டத்தில் 100-க்கும்  மேற்பட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கள் பங்கேற்றனர்.

கோவை

கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட  உதவித்தலைவர் பி.எம்.நாச்சி முத்து தலைமை தாங்கினார். இதில், மாநில உதவிச்செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட செய லாளர் குடியரசு, தேசிய ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலா ளர் பி.கருணாநிதி, ஓய்வூதியர் சங்க அகில இந்திய உதவிப்பொரு ளாளர் கே.பங்கஜவள்ளி, பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் என்.பி. ராஜேந்திரன் நன்றி கூறினார். பொள்ளாச்சி தலைமை பிஎஸ் என்எல் அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ் என்எல்  ஓய்வூதியர் சங்க தாலுகா  தலைவர் பி.தங்கமணி தலைமை வகித்தார். இதில், மாநில அமைப் புச் செயலாளர்  முகமது ஜாபர், தாலுகா செயலாளர் பிரபாகரன், கிளை நிர்வாகிகள் வி.சசிதரன், என்.சிவசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.